கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரையில் உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை மக்களிடம் கேட்டறிந்து செய்தியாக பதிவிட்டிருந்தோம்.
இதனையடுத்து அங்கு நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது, பொது மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தாங்கள் வசிக்கும் பகுதியின் அவலநிலையை செய்தியாக வெளியிட்டு அதற்கு தீர்வு தேடித்தந்த ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்தி குழுமத்திற்கு அப்பகுதி மக்கள் இன் முகத்துடன் நன்றியை தெரிவித்தனர்.