அதிரை அடுத்த பட்டுக்கோட்டை பாலத்தளி அருகே இன்று மதியம் வேன் மீது பைக் மோதி சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கினார்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் K. மகேந்திரன் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டையிலிருந்து இன்று மதியம் புதுமனை புகு விழா ஒன்றிற்காக பாலத்தளி கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பாலத்தளி அருகே துர்க்கையம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வந்தபோது சாலையில் மக்கள் கூட்டம் கூடியிருந்ததைக் கண்ட K. மகேந்திரன் காரில் இருந்து உடனே இறங்கி வந்து பார்த்போது, இளைஞர் ஒருவருக்கு தலையில் பலமாக அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, விபத்தில் சிக்கிய இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மீது மோதிஎதில் தலை மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவரை K. மகேந்திரன் தனது காரில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், எதிரே வந்த ஆம்புலன்ஸ் வந்ததால் காயமடைந்தவரை முதலுதவிக்காக அதில் ஏற்றிவிட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு காயமடைந்தவரின் உறவினர்களுக்கு நடந்தவற்றை கூறி அவர்களை மருத்துவமனை வரவழைத்து ஆறுதல் கூறினார்.
விபத்தில் சிக்கி காயமடைந்தவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கல் நெஞ்சங்களுக்கு கொண்டவர்கள் மத்தியில், காயமடைந்தவரை தன கண்ணில் பட்டதும் உடனே காப்பாற்றிய பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் K. மகேந்திரனின் மனிதாபிமானம் போற்றுதலுக்குரியது.