அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் சமூக ஆர்வலர் வ. விவேகானந்தன் அவர்களின் மாமனாரும், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சா.கி. பாலையன்(வயது-82) அவர்கள் இயற்கை எய்தினார்.
இந்நிலையில் இறந்த பாலையனின் கண்கள் அவரது குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் அதிரை அரிமா சங்கத்திற்கு வழங்கபட்டது. அவரின் கண்களை அதிரை அரிமா சங்க பொறுப்பாளர்கள் பேரா. செய்யது அகமது கபீர், சூப்பர் அப்துல் ரஹ்மான், அப்துல் ஜலீல், சாரா அகமது, ஆறுமுகசாமி ஆகியோர் தானமாக பெற்று கும்பகோணத்தில் இயங்கி வரும் மதுரை அரவிந்த் கண் வங்கிக்கு நேரடியாக சென்று ஒப்படைத்தனர்.
மேலும் கண்களை அறுவை சிகிச்சை செய்து எடுத்து தந்த முத்துப்பேட்டை சேரன் மாரிமுத்து அவர்களுக்கு நன்றியும், கண்களை தானமாக தந்த குடும்பத்தினருக்கு நன்றி கலந்த பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.