அதிரை அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்கு அழைத்து வந்த 10,15 இளைஞர்கள் அங்குள்ள செவிலியரை அனாகரிகமான முறையில் திட்டி தாக்க முயன்றுள்ளனர். அவர்களை உளநோயாளிகள் காப்பாற்றியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமிகள் அங்குள்ள மருந்தக கண்ணாடி கதவை அடித்து நொருக்கினர், மேலும் அங்கு பிரசவத்திற்கு வந்திருந்த பாப்பா நாட்டை சேர்ந்த பெயர் சொல்ல மறுக்கும் பெண்மணியை தாக்க முயன்றுள்ளனர்.
பயத்தில் உறைந்த அந்த பெண்மணி பயத்தில் ஆழ்ந்து போயுள்ளார்.
நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து போலிசார் வழக்கு பதிவு செய்து CCTV பதிவு காட்சிகளை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது .