CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 3வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று வெள்ளிக்கிழமை 3வது நாளாக தொடரும் இப்போராட்டத்திற்கு அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத், தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்றத்தினர், முஹல்லாவாசிகள் என 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு போராட்ட களத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
CAA, NRC, NPR குறித்த விளக்கபடமும் போராட்டத்தில் உள்ளவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. மேலும் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.