தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மஜகவினர் காவல்துறையில் மனு அளிப்பு.
அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காவல் துறை ஆய்வாளரை சந்தித்து நாளை 15/09/2018 சனிக்கிழமை வினாயகர் ஊர்வலம் அதிரையில் நடைபெறுவதால் நெல்லை மற்றும் திருப்பூண்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதை கண்டும் அதிரையில் அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாக உறவு பாராட்டி வாழும் அதிரையில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் நிகழாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதில் நகர பொருப்புக் குழு தலைவர் அப்துல் சமது, து.தலைவர் முகமது யூசுப், பொருப்புக்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) ஜிர்ஜிஸ் அஹமது, பரோஸ்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.