தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிரை நகர மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று(23.9.2018) மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு,ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள்,போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் முன் எடுத்தரைத்தனர்.
இக்கூட்டத்தில் அதிரை நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.