அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு முதலே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதேபோல் ரமலான் மாதத்திலும் மின்தடைகள் ஏற்பட்டன.
இன்று காலை முதலே அதிரை முழுவதும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மின்தடை செய்யப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அதிரையில் வீசி வரும் காற்று என சாக்குச் சொல்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.
தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் பழனிச்சாமி முழங்கி வரும் நிலையில், அதிராம்பட்டினத்தில் மட்டும் தொடர்ச்சியான மின்வெட்டு ஏற்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும், குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ் முதலிய விலை உயர்ந்த பொருட்களும் பழுதாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே வரும் காலங்களில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் அதிரை மின்வாரியம் தயாராக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.