தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, அதிரை மேலத்தெரு பெரிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 3 அணிகள் கலந்து கொண்டனர். TLCC பட்டுக்கோட்டை , WCC, மற்றும் RCCC ஆகிய 3 அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் இறுதி ஆட்டத்திற்கு WCC vs TLCC ஆணியனர் தகுதி பெற்றனர்.
இன்று(24.03.2019) நடைபெற்ற ஆட்டத்தில் WCC அணியினை சார்ந்த ஜெரி 70 பந்துகளில் 109 ஓட்டங்கள் எடுத்து கலத்தில் இருந்தார். இதில் 12 பவுன்டரிகளும் ஏழு சிக்சர்களும் அடங்கும்.
இதுவே WCC மைதானத்தில் அடிக்க பட்ட முதல் சதம் ஆகும்.
இந்த தொடருக்கான இறுதி ஆட்டம் வருகின்ற 31/03/2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.