அதிரையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற 18.07.2018 புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து பகல் 1 மணி வரை அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண்புரை , சர்க்கரை நோய் , குழந்தைகளின் கண்நோய் ஆகியவைக்கு பரிசோதித்து இலவசமாக சிகிச்சையளிக்கப்படும். தூரப்பார்வை , கிட்டப்பார்வை , வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு முகாமில் மலிவு விலையில் கண்ணாடி கிடைக்கும்.
மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்களுக்கு அனைத்து செலவுகளும் முற்றிலும் இலவசம். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.