மழைக்காலம் துவங்குவதை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி இன்று 20.07.2018 காலை நடைபெற்றது.
தூய்மைப்பணியில் ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி.எம்.எஸ். எம் முஹம்மது அபுபக்கர் , செயலாளர் ஹாஜி.எம்.ஏ.அப்துல் காதர் , ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர் எஸ்.அஹமது அனஸ் , துணைத் தலைவர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது , செயலர் எம். எப். முஹம்மது சலீம் , பொருளாளர் ஏ. ஷேக் அலி மற்றும் முஹல்லாவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டு புதுமனைத்தெரு , சி.எம்.பி லைன் பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்கள், பாலிதீன் கேரி பைகள், பாட்டில்கள், குப்பைகளை அகற்றினர்.
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ. விவேகானந்தம் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு , தூய்மையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். வெள்ளிக்கிழமை தோறும் காலை 07.00 மணிமுதல் ஷம்சுல் இஸ்லாம் சங்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது.