தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடந்த ஆண்டுக்கான(2018-2019) தண்ணீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி ஆகியவை செலுத்தாத பொதுமக்களிடம் நேரடியாக அவர்களின் வீட்டுக்கே சென்று பணம் செலுத்தும் முறையை அதிரை பேரூராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
அதிரை பேரூராட்சியால் ஓரு அமைப்பைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த வரி வசூலித்து முறையில், நேரிலேயே பணத்தை பெற்றுக்கொண்டு உடனே ரசீதும் கொடுக்கப்படுகிறது.
ஆனால் அவ்வாறு வசூலிக்கும்போது திடக்கழிவு என்னும் பெயரில் தனியாக பணம் வசூலிப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டால், அதற்கு வசூலிப்பவர்கள் சரியான விளக்கம் கொடுப்பதில்லை என்றும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இந்த திடக்கழிவு என்னும் பெயரில் பணம் வசூலிப்பது ஏன் ? என்னும் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.