தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேது ரோடு கடற்கரை சாலையில் காதிர் முகைதீன் கல்லூரி அருகில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிராம்பட்டினம் சேது ரோடு கடற்கரை சாலையில் முத்தம்மாள் தெரு கோவில் நுழைவாயில் அருகே நேற்று இரவு 12 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள வீட்டின் வாசலில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினார்கள்.
இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.