தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
பொதுமக்களுக்கு வைரஸ் நோய் ஏற்படாமல் இருக்கும் வகையில் கை கழுவ பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் டேங்க் அமைத்து மக்களுக்கு கை கழுவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துனை ஆட்சியர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் கிராம அலுவலர் கலந்து கொண்டனர்.