Thursday, March 28, 2024

அதிரையில் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது.

இதனை அடுத்து அமல்படுத்த பட்டுள்ள ஊரடங்கில் நாடே ஸ்தம்பித்தன.

இந்நிலையில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுகின்றனர்.

காவல்துறையினர் எவ்வளவோ எச்சரித்தும் இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் தேவையின்றி வெளியில் நடமாடும் நிலை தொடர்கிறது.

இதனிடையே அவசியமின்றி வெளியில் சுற்றும் நபர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் அவசிய தேவைக்காக வந்து செல்லும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த கேட்டு கொண்டதன் பேரில், பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி வாசலில் காவல்துறையினர் கையில் பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு நிகழ்த்தினர்.

இதனை நகர காவல் ஆய்வாளர் ஜெயமோகன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை காவல் சரகத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...