தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கரையுர் தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று (28/05/2018) திங்கள்கிழமை காவடியில் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த காவடி ஊர்வலம் மாலை அதிரை பேருந்து நிலையம் வழியாக சென்றனர்.
இந்த காவடி மஃரிப் நேரத்தில் (நோன்பு துறக்கும் நேரம் ) சென்று கொண்டு இருக்கும்போது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க நேரத்தில் தாரை தப்பட்டைகளை நிறுத்தி வைத்தனர்.
இந்த ஊர்வலம் அமைதியான முறையில் இஸ்லாமியர்களின் எந்த வித வேண்டுகோளும் இல்லாமல் ஒத்துழைப்பு நல்கிய எங்கள் தொப்புள் கொடி நெஞ்சங்களை மீண்டும் ஒரு முறை இஸ்லாமியர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகிறார்கள்