தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி “எக்ஸ்பிரஸ் நேரம்” என்னும் நிகழ்ச்சி செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம், சுற்றுச்சூழல், கல்வி , விளையாட்டு, வரலாறு, அரசியல், சட்டம் ஆகிய துறைகள் குறித்து அதன் துறை சார்ந்த நிபுணர்கள் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
நமது எக்ஸ்பிரஸ் நேரம் நிகழ்ச்சியில் முதல் ஒளிபரப்பாக மருத்துவம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
அதிரையர்களே… உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மருத்துவரிடம் கேள்வியாக கேட்கலாம். உங்கள் கேள்விகளை அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கவும்.
உங்கள் கேள்விகளை எங்களுக்கு +91 9551070008 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள்..