கடந்த 16ஆம் தேதி அதிகாலை அதிரை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வெகுவாக சாய்ந்தன இதனால் அன்று முதல் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டன.
இதனை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த மின்வாரிய ஊழியர்கள், இரவுபகல் பாராது பணிகளை செய்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 60℅ பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை இரவோ அல்லது மறுநாள் காலையிலோ மின் இணைப்பு கிடைத்துவிடும் என்றும், இருப்பினும் அவ்வபோது சில காலங்களுக்கு மின் தடை இருக்கத்தான் செய்யும் எனவும் தெரிவித்தார்.
கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும், ஆதலால் தான் அடிக்கடி மின் தடை எற்பட வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இந்த மிந்தடையை பொறுத்து கொண்ட பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளதுடன், சிலகாலம் எற்படும் அசெளகரியங்களை தாங்கி கொள்ள வேண்டும் என்றார்.