Thursday, March 28, 2024

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிரை பேரூராட்சிக்கு மனு..!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கடைத்தெருவிற்கு அருகில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற ம் 90.4 கோரிக்கை. அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில்,கடைத்தெருவிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையை பொதுமக்கள், மாணவ, மாணவியர், வியாபாரிகள், பேருந்து நிலையம் செல்லும் பயணிகள், தொழுகைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் மருந்தகங்கள், வங்கி, மீன் மார்க்கெட், உணவு விடுதிகள், கடைகள், வழிபாட்டு தலங்கள், ஆகியவை உள்ளன. இச்சாலையில் ஓரத்தில் உள்ள மழை நீர் வடிகாலில் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் சேர்ந்து அடைபட்டுவருவதால் ஸ்டேட் வங்கி அருகில் கழிவு நீர் சாலைகளில் ஓடி வருகிறது. இதனால் சாலை சேதமடைவதுவுடன், கழிவு நீரால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தொழுகைக்கு செல்வோரின் உடல் மற்றும் ஆடைகள் மாசு பட்டு வருகிறது. எனவே உடனடியாக அதிராம்பட்டினம் பேரூராட்சி தற்காலிகமாக இந்த பகுதியில் உள்ள கால்வாயில் சேர்ந்துள்ள சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கில் கொண்டு சாலையின் இருபுறமும் அகலமான, பாதுகாப்பான, கான்கிரீட்டால் ஆன, மூடப்பட்ட, மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைக்க வேண்டும் என அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் கோரிக்கை மனு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...