குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வறுதிறது.அதைப்போல தமிழகத்தில் ஷாஹின் பாக் என்னும் பெயரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் 40 இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சி போராட்டமாக இன்று பல்வேறு பகுதிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஷாஹின் பாக் 27வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று திங்கள்கிழமை பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனரா வங்கி முன்பு திடீரென 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை முன்னே அறிந்த காவல்துறையினர் கனரா வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.