ஏர்ஏசியா (இந்தியா) இந்த ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட் சலுகைகளை அளித்துள்ளது.
ஏர்சியாவின் இச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி (Android App) அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும்.
ஏர்ஏசியாவின் இந்த சலுகை விலை டிக்கெட்களை செப்டம்பர் 18 ம் தேதிக்குள் புக் செய்து 2019 ம் ஆண்டு ஜூன் 30 ம் தெதி வரை பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு – சென்னை, கொச்சி -பெங்களூரு, கவுகாத்தி – இம்பால் ஆகிய வழித்தடங்களில் வெறும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும்.
(TATA Sons) டாடா சன்ஸ் மற்றும் ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனம் தான் ஏர்ஏசியா இந்தியாவாகும்.
2014 ஜூன் 12 ம் தேதி தொடங்கப்பட்ட ஏர்ஏசியா இந்தியா விமான நிறுவனம் ஹைதராபாத், ஸ்ரீநகர், பாக்தோக்ரா, ராஞ்சி, கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், சென்னை, சூரத், புவனேஸ்வர் மற்றும் அம்ரித்ஸர் போன்ற வழித்தடங்களில் விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.