Saturday, April 20, 2024

வாகனதிருட்டு வழக்கில் அதிரை இளைஞர் கைது !

Share post:

Date:

- Advertisement -

திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை போலிசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 12 பைக்குகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடைபெறுவதாக போலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

ஆனால் இரு சக்கர வாகனத்தை திருடுபவர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காதநிலையில், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஆகாஷ் (19) , கொய்யாதோப்பு வினோத் (22) , அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது அசின் (22) , முத்துப்பேட்டை பேட்டை வாசீம்கான் (23) என்பதும் இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் , நாகை மாவட்ட பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து நான்கு பேர் அளித்த தகவலின் பேரில் 12 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...