Tuesday, April 16, 2024

ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி !

Share post:

Date:

- Advertisement -

பாஜக வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யுமான சுப்ரமணிய சுவாமி மீது சத்தீஸ்கர், தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் எடுத்துக்கொள்வார் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை எதிர்த்து சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால் கொடுத்த புகாரின் பேரில் பத்தல்கோன் காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பவன் அகர்வால், “சுப்பிரமணிய சுவாமி வேண்டுமென்றே ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இது ஒரு மோசமான, பொறுத்துக்கொள்ளமுடியாத கருத்து” என கூறியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி மீது 504, 505(2), 511 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக தெலுங்கானாவிலும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...