மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெர்மனியில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்று வந்த திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மே பதினேழு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.