திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் முத்துப்பேட்டை ஆய்வாளர் ஆகியோரிடம் மமக வழக்கறிஞர் அணி மாநில பொருளாளர் தீன் முகம்மது தலைமையில் நேரில் சென்று முத்துப்பேட்டையில் நடக்க இருக்கும் விநாயகர் ஊர்வலம் சம்மந்தமாக தமுமுக மற்றும் மமக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இதில் தமுமுக நகர தலைவர் சம்சுதீன், மமக நகர செயலாளர் ஹாமீம், தமுமுக நகர செயலாளர் NMM சீமான், தமுமுக ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, தமுமுக பொருளாளர் நபீல் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் நடத்த வேண்டும் , சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மாலைக்குள் முடிக்க வேண்டும் மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.