தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த கே.எஸ்.எம். பகுருதின் மகன் இர்பான்(வயது-17) அதே போல் கே.கே. பகுருதின் மகன் சுஹைல் (வயது-17) இவர்கள் இருவரும் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று (04/09/2018) செவ்வாய்க்கிழமை கரம்பக்காடு பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பிச் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிபெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.
இப்போட்டியானது காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து கரம்பகாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு WSC என்று பெயரிட்டு விளையாடி வெற்றி பெற்றுள்ளனர், வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களும் மற்றும் தெரு வாசிகளும் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.
சிறப்பாக விளையாடி தகுதி பெற்று அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கும் இர்பான் மற்றும் சுஹைல் இரு மாணவர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.