2018-2019க்கான மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம் அடுத்துள்ள வெளிவயலில் கபாடி,கால்பந்து மற்றம் கைப்பந்து போட்டி இன்று காலை முதல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சார்ந்த பல்வேறு அணிகள் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் அதிரை சார்ந்த WFC, AYFA, AFFA ஆகிய அணிகள் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் பீச் கைப்பந்து போட்டியில் WSC அணியினை சார்ந்த அஸ்லம்,இர்ஃபான் ஆகிய இருவரும் கும்பகோணம் அணியினரிடம் மோதி முன்றாம் இடத்தை தட்டி சென்றனர்.
அதே போல் கால்பந்து போட்டியில் அதிரையை சார்ந்த WFC, AFFA, AYFA அணியினர் விளையாடினர். இந்நிலையில் இறுதி ஆட்டததில் AYFA மற்றும் WFC அணியினருக்கு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் AYFA அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் WFC அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அதுமட்டுமின்றி இப்போட்டியில் வென்றதன் மூலம் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கும் தகுதி பெற்றனர்.
அதே போல் கபாடி போட்டியில் கலாமின் கனவுகள் கொள்ளுக்காடு அணியினம் வெளிவயல் அணியினரும் இறுதி ஆட்டம் விளையாடினர். இதில் கலாமின் கனவுகள் கொள்ளுக்காடு அணியினர் வெற்றி பெற்றனர்.
இறுதியில் வெற்றி பெற்ற அணியினருக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற அணியினர்களுக்குழு அதிரை எக்ஸ்பிரஸின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.