திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் நாலாபுறமும் சிதறிக்கிடந்த்து,மழை இரண்டு நாட்களாக பெய்து வருவதால் குப்பைகள் சேறும் சகதியுமாக மக்கள் அந்தப் பகுதியில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் அந்த குப்பைகளினால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது. ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து இன்று காலை ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு குப்பைகள் அகற்றப்பட்டது.
அந்த பகுதிக்கு நிரந்தர குப்பைத்தொட்டி அமைக்கவேண்டும் என்றும் தொட்டி வைப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற குப்பைகள் தேங்காமல் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.