தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு.
ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் வலிமை வாய்ந்தவையாகும்.அதனடிப்படையில் இன்று மல்லிப்பட்டினம் மனோராவில் தனி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மல்லிப்பட்டினம் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சாலையில் குண்டும்,குழியுமாக இருப்பதால் சாலை சீரமைக்க வேண்டும்,குடிநீர் பிரச்சனை குறித்து அனைத்து தெருக்களிலும் குடிநீர் வினியோகம் சரியாக வருகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதையும், புதுக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருக்கின்றன மழைக்காலம் வர இருப்பதால் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும் என்பன உள்ளடக்கிய கோரிக்கை மனுவை மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத் தலைவர் அப்துல் ஹலீம் மற்றும் ஹசன் முகைதீன் இருவரும் அளித்தனர்.
மேற்படி உள்ள கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.