Friday, April 19, 2024

மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல்(படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியல்.

ஓகி புயல் அச்சம் நீங்கிய பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை.இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் ஓகி புயல் காரணமாக காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை உடனடியாக அரசு போர்கால அடிப்படையில் மீட்காததை கண்டித்தும் இன்று(9.12.2017) தஞ்சை மாவட்ட மீனவர்கள்  சாலை மறியல் செய்தனர்.

இதனையறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள் ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும் என்று கூறியதால் மீன்வர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.மறியல் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.

இதற்கிடையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சம்பவ இடத்திற்கு வந்து மீனவ பிரதிநிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மறியல் போராட்டத்தில் சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க பொருளாளர் அ.இப்றாகிம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...