தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (15.11.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமை தாங்கினார், நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவை அமைத்தனர். கஜா புயலை எதிர்கொள்வது,மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்வது குறித்தும், நகரத்தின் பல பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது இதனை கருத்தில் கொண்டு புகார் அளிப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்களை பங்கெடுக்க செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட பொதுச் செயலாளர் ரஹீஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.