மதுகூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; மதுக்கூரில் கிரிக்கெட் தொடர்போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
பல்வேறு அணிகள் கலந்துகொண்டு ஆடிய இக்கிரிக்கெட் தொடர்போட்டியானது இன்று (13.05.2018) இறுதி கட்டத்திற்கு வந்தடைந்தது. இன்று (13.05.2018) மதுக்கூரில் நடைபெற்ற இறுதி ஆட்டமானது அதிரை wcc மற்றும் மதுக்கூர் அணியினருக்கும் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர்போட்டியானது இறுதியில் அதிரை wcc அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
கடந்த இரண்டு மாத காலமாக பல இடங்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அதிரை wcc அணியினர் 7 இடங்களில் முதல் பரிசை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.