தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மழவேனிற்காடு தெற்குத் தெரு கிராமத்தில் மின் கம்பங்கள் இல்லாமல் மின் கம்பிகள் தொங்குகின்றன. அப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் சென்று வரக்கூடிய பகுதியாகும்.
இதுபோல் மின்கம்பம் இன்றி தொங்கும் மின்கம்பிகளால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மின்கம்பிகளால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழக்கின்றன. அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பலமுறை சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
எனவே இவ்விஷயத்தில் அலட்சியம் செய்யாமல் அதிரை மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தூக்கத்திலிருக்கும் அதிரை மின்வாரியம் விழிக்குமா ?