Saturday, April 20, 2024

பேரிகார்டை இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன்… புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்!!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை: சென்னையில் தீப்பொறி பறக்க பைக் ரேஸ் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ் நடத்துவதை போலீஸார் கண்காணித்து வந்தனர். எனினும் அவர்களையும் மீறி சில இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்டனர்.

சென்னை காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 3 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மேம்பாலத்தில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக போலீஸார் பேரிகார்டை வைத்து தடுத்திருந்தனர். அப்போது அந்த பேரிகார்டை பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் இழுத்து சென்றார். அப்போது சாலையில் தீப்பொறிக்கும் வகையில் நெஞ்சை பதைபதைக்கும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரு இளைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை வீடியோவாக எடுத்து தம்பட்டம் அடித்து கொண்டார். இதையடுத்து போலீஸார் 3 பேரை கைது செய்தனர். இதில் பேரிகார்டை இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கூறுகையில் பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன். இப்போதுதான் இதனால் பொதுமக்கள் எத்தகைய இன்னலை சந்தித்திருப்பர் என்பது தெரிந்தது. இனிமேல் இது போல் தவறு செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...