Thursday, March 28, 2024

பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’ பிறகு ஏன் இடஒதுக்கீடு – சீமான் அதிரடி கேள்வி !

Share post:

Date:

- Advertisement -

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க திமுக எதிர்ப்பு கடும் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அதுகுறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக்கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை அறிமுகப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். 10 சதவிகித இடஒதுக்கீட்டில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒரு திருத்த மசோதாவை தாக்கல் செய்து தமிழ்நாட்டில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்கும் புதிய முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேநேரம், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு மூலம் தமிழகம் கூடுதலாக 1000 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களை பெற வாய்ப்பு உள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதேபோல் இக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என்றார்.

அதேசமயம் 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெயரே “முன்னேறிய வகுப்பினர்”, அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு என்று கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...