Saturday, April 20, 2024

புதுக்கோட்டை அருகே கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3 -பேர் பலி..

Share post:

Date:

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா மகன் சதாம்உசேன்(28), உதுமான் மகன் அசாருதீன்(25), இக்பால் மகன் ராசித் (25) ஆகிய மூவரும் நண்பர்கள் இவர்கள் மூவரும் வேலையின் காரணமாக காரில் நேற்று மாலை புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் மேலத்தாணியத்திற்கு வந்துகொண்டு இருந்தனர். அந்தகார் பெருமாநாடு அருகே உள்ள செல்லுகுடி விளக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் பலத்த சப்தத்துடன் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் விரைந்து சென்று, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி புதுகை அரசு மருத்துவ கல்லுhரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காரில் வந்த 3 பேரும் இறந்து போனதால் காரை ஓட்டி வந்தவர் யார் என்பது, தெரியவில்லை. இதுகுறித்து, திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் இறந்து போனதால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. இதில் சதாம் உசேன் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். ராசித்அலி வெளிநாட்டில் இருந்து வந்து மொபைல் கடை வைத்துள்ளார்.
அசாருதீன் என்பவர் புதுக்கோட்டையில் ஐஏஎஸ் அகடாமி நடத்தி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...