இந்தியாவில் தற்போது ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து 20 பெண் பத்திரிக்கையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதனால் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் பதவி விலகுவார் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்துள்ளார். வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தார் எம்.ஜே அக்பர்.
இவர் பிரதமர் மோடியிடம் தனது ராஜினமா கடிதத்தை அளித்துள்ளார். ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் மூலம் அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.