Friday, April 19, 2024

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெறும் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியது. புயலால் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

அதனைத்தொடர்ந்து தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் 125 வீடுகள் புணரமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் புணரமைக்கப்பட்ட வீடுகளை உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நாளை 08.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் M முகம்மது இஸ்மாயில் மற்றும் மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முகமது ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

மேலும் SDPI மாநில செயலாளர் A. அபுபக்கர் சித்தீக், சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலாளர் A. முகம்மது அப்துல் காதர், ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி தலைவர் A. நெய்னா முகம்மது, AJ ஜூம்மா பள்ளி தலைவர் A.M.K. முகம்மது அமீன் மற்றும் கடற்கரைத்தெரு ஜூம்மா பள்ளி இணைச்செயலாளர் P.L.A. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...