Thursday, April 25, 2024

பள்ளிக்குள் பசு, பள்ளிக்கு வெளியே மாணவர்கள் வினோத ஆட்சி புரியும் பாஜக….!

Share post:

Date:

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். உயர் மட்ட அதிகா ரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். வழி தவறிய பசுக்களை பாதுகாக்க கமிட்டி அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கும் அறிவுரை வழங்கிய செய்தி சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை சிலர் வதைப்பதால் விவசாயிகள் பள்ளி, அரசு மருத்துவமனைகளில் கட்டி வைத்து வரு கின்றனர். அந்த வகையில், பண்டா என்ற பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இதைக் கண்ட பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்லாமல் வெளியேறினர். இதற்கிடையே கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மாடுகளை கட்டி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...