அதிகார வர்க்கத்தை ஆட்டிபடைக்கும் ஒரே சக்தி ஊடகமென்றால் அது மிகையில்லை !
இதற்கு பல்வேறு உதாரணங்கள் நம்மிடையே உள்ளன, அதிரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை ஊடகமாக திகழ்ந்து வரும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தை அவர்களின் வாழ்வாதார போராட்டத்தை படம்பிடிக்க அழைக்காமலில்லை !
அழைப்பை ஏற்று சம்பவ இடத்திற்கே சென்று அவர்களின் குரலாக உள்ளக் குமுறல்களை, பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் இணையம், முகநூல் வாயிலாக வெளி படுத்துகின்றனர்.
இது,அதிகார வட்ட அதிகாரிகளுக்கும் சென்றடையும் வகையில் நமது முகநூல் பக்கங்கள் வடிவமைக்கப்பட்ட நுணுக்கத்தினால் அவர்களின் உள்ளங்கை உலகிற்கே இந்த மக்கள் பிரச்சனை உடனுக்குடன் சென்றடைகின்றன.
உயரதிகாகளின் அதட்டலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சப்பாட்டினால் அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடக செய்திகளை உதாசீனம் செய்யாமல் செயலில் இறங்குகின்றனர் அதிகாரிகள்!
அதன் விளைவாக பல்வேறு நலவுகள் நடந்துள்ளன என்கின்றனர் வாசக பெருமக்கள் !
அதன் தொடர்ச்சியே… பட்டுக்கோட்டை கஜா போராட்டம் செய்தி. முன்னணி ஊடகளுக்கு நிகராக செய்தி வெளியிட்டு அதிகாரிகளை செயலுக்கு வித்திட்ட அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்திற்கு நன்றி தெரிவித்து குரல் பதிவை தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
மக்களின் குரலாக என்றும் இருப்போம், துயர் துடைக்க தோல்கொடுப்போம்.