பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு ரயிலடி முஹல்லாவாசிகள் நன்றி தெரிவித்து சால்வை அணிவிப்பு
பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மையவாடிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் போர் அமைத்துக் கொடுத்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.சேகர் அவர்களுக்கும் , இதற்கு ஒத்துழைப்பு நல்கிய நகர செயலாளர் திரு.சுப. ராஜேந்திரன் அவர்களுக்கும் பட்டுக்கோட்டை முஸ்லிம்களின் சார்பில் நன்றி தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.