தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பாசனப்பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் இதுவரை திறந்துவிடப்படவில்லை.
இதனால் ஒருபோக சாகுபடியைக் கூட செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரி,குளங்கள், வறண்டு கிடப்பதால் ஆடு,மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.
எனவே பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறந்துவிடக்கோரியும் விவசாயத்தை காப்ப வலியுறுத்தியும் திமுக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக,அமமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகள்,விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை (செப் 4) கடைகளை முழுமையாக அடைத்து பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டுள்ளது.