தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு.
நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று செப்டம்பர் 10ல் தேசம் முழுவதும் முழு அடைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு கொடுத்திருந்தது.அதனடிப்படையில் பல மாநில கட்சிகள் ஆதரவு அளித்தன.இந்த முழுஅடைப்பில் மஜகவும் ஆதரவு அளித்தது.
பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை குத்துபுதீன் தலைமையில் மஜகவினர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில து.பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அப்துல் சலாம், பட்டுக்கோட்டை நகர பொறுப்புக்கு தலைவர் முகமது யாசீன், அதிரை நகர பொறுப்புக்கு தலைவர் அப்துல் சமது, து.தலைவர் முகமது யூசுப் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.