அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. முதலாவது ஆட்டமாக காரைக்கால் – நாகூர் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் நாகூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA – பட்டுக்கோட்டை அணிகள் களம் கண்டன.
உள்ளூர் ரசிகர்களின் பலத்த கர ஒலிகளுக்கு மத்தியில் களமிறங்கிய நடப்பு சாம்பியனான அதிரை AFFA அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறஙகியது.
முதல் பகுதி நேரம் வரை இரு அணியினரும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் ஆடி முடித்தனர்.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் விவேகானந்தா பட்டுக்கோட்டை அணி யாரும் எதிர்பாராத வகையில் முதல் கோலை அடித்தது.
தொடர்ந்து ஆடிய அதிரை AFFA அணி 0-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியுற்றது அதிரை ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் வருத்ததையும் அளிக்கிறது.
நாளைய தினம் நாகூர் – பட்டுக்கோட்டை அணிகள் காலிறுதி போட்டியில் சந்திக்கின்றனர்.