Thursday, March 28, 2024

தூத்தூர் கன்னியாகுமரி த்ரில் வெற்றி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் தூத்தூர் கன்னியாகுமரி – கலைவானர் 7s கண்டனூர் அணிகள் மோதின.

முன்னதாக கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகளும், தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்

அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் இரு அணியினரும் உத்வேகமாக அரங்கில் விளையாட, கண்டனூர் அணி சாமர்த்தியமாக ஒரு கோலை அடித்தது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் நடுவில் தூத்தூர் கன்னியாகுமரி அணி தனக்கான கோலை அடித்துதும் ஆட்டம் 1-1 என்று சமநிலையில் மிகவும் பரபப்பானது.

அரையிறுதிக்கு செல்வது நீயா நானா என்ற உச்சகட்ட பரபரப்பில் இரு அணியினரும் கடைசி நிமிடங்களில் ஆடிக்கொண்டிருக்க தூத்தூர் அணி மற்றொரு கோல் அடித்து 2-1 முன்னிலை பெற்று கண்டனூரின் அரையிறுதி கனவை கானல் நீர் ஆக்கியது.

இதன் மூலம் தூத்தூர் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டமாக மாலை 4.30 மணிக்கு காரைக்கால் – நாகூர் அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA-பட்டுக்கோட்டை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...