மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் கடந்த இரு நாட்களாக பதவி ஏற்று வருகின்றனர். நேற்று முழுவதும் 313 எம்பிக்கள் பதவி ஏற்றனர்.
இன்று தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றனர். தாய்மொழியான தமிழ் மொழியில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள், “வாழ்க தமிழ்”, “வளர்க தமிழ்”, “வாழ்க பெரியார்” என பதவியேற்ற பின் இறுதியாக கூறினர்.
அப்போது பதிலுக்கு அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.