விவசாயத்தை பற்றிய மாபெரும் கருத்தரங்கம் கோவையில் நடைபெற உள்ளது. தமிழக அளவில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் , அனைத்து மாவட்ட மக்களும் கலந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கத்தில் விவசாயத்திற்கு தேவையான மருந்துகள் , பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் பற்றிய விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.
இந்த கருத்தரங்கமானது வருகின்ற 13.07.2018(வெள்ளிக்கிழமை) முதல் 16.07.2018(திங்கட்கிழமை) வரை நான்கு நாட்களுக்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள கீழமேட்டில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கம் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் எனவும் , வருகின்ற மக்களுக்கு உணவு வழங்கப்படும் எனவும் , கருத்தரங்கத்திற்கான அனுமதி இலவசம் எனவும் தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.