Thursday, March 28, 2024

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அதிரடி கைது ! எச்.ராஜாவும் கைது செய்யப்படுவாரா ?

Share post:

Date:

- Advertisement -

கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அத்துடன் காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சவால் விடும் தொனியில் பேசியிருந்தார்.

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து கூட்டுசதி, வன்முறையை தூண்டிவிடுதல், கொலைமிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர் கோட்டம் போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் கைது செய்யவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும், வீட்டில்தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டில், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது கருணாஸ் வீடு முன்பாக பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எம்எல்ஏ கருணாஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை படுமோசமாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...