கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர்மழையின் காரணத்தினால் கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெய்துகொண்டிருக்கின்ற கனமழையால் கேரளாவே மொத்தமாக மூழ்கி உள்ளது.
இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அப்பகுதியில் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு:-