காஷ்மீரில் உள்ள முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா வீடு ஜம்முவில் உள்ளது. இங்கு காலையில் காரில் வந்த ஒருவர் வீட்டின்மீது மோதி நிறுத்தினார். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் மர்ம நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் எந்த நோக்கத்தில் வந்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வந்த நபர் முராத் அலிஷா என தெரிய வந்துள்ளது.